வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஒற்றை மதம்

கனவுலக வாசியிடமிருந்து வருகின்ற துர் நாற்றம்
மஞ்சள் வண்ணம் பூசிக்கொண்டு வலம் வருகிறது.
கிழக்கும் மேற்குமற்ற வான வெளியில் நிலவு தோணி போல அசைந்து கொண்டுருக்கிறது.
கால்களுக்கு கீழே அரைந்து அரைந்து நெழிகின்றன கனவுகள்.
முகங்கள் கலைந்து கொண்டே இருக்கும் பிம்ப வெளியில் நான் அவனைக் கண்டேன்.
தன்னை பரிசுத்த ஆவி என்று அழைத்துக் கொண்டான்.
தெளிவற்ற இரவின் சாலை வெளியில் சடைப் பின்னலுடன் அவள் எதிர் வந்தாள்.
நடுக்காட்டின் இசக்கி என்றாள்.
காலை 3 மணியில் பிரார்த்தனை கடிகார முள்ளினுள் ஒலித்தது.
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் என்று விதிர்த்து அடங்கியது.
தெரு முக்கில் இருந்து தன்னைத் தானே எதிர்த்து குறைத்துக் கொண்டிருந்தது கருப்பு நாய்.
மஞ்சள் வண்ணத்துடன் கோயில் மணி நாசி நிரம்பி வழிந்தது.
அத்துவான வெளியில் சிறகடிப்புகள் வானைத் தேடிக் கொண்டே
உதிர்ந்து வீழ்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக