வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

அனைத்தும் உதிர்ந்த பின்

அனைத்தையும் உதிர்த்த ஒற்றை மரம்.
கைவிடப்பட்ட நகரின் வரைபடம் போல
நிலத்தில் கிடக்கிறது.
அந்த நகரில் வானம் தொலைத்த சிறகுகளின் வழிகள் இருந்தன.
பூமியைத்தேடும் தூவிகள் பிறாண்டிய புதைகுழிகளைப் பார்த்தேன்.
நடுமையமான இளைப்பாறும் பிரதேசத்தில்
இடைவிடாது கூவிக் கொண்டிருந்த
அந்த இணைப் பறவையையும்.
ஆனால் அதன் எல்லைகளை என்ன செய்வது.
இந்த இரவின் நிறத்தில்
அதன் நிழல்
கூட்டில் பசியுடன் அலைக்கழியும் குஞ்சுகளைப் போல குமைகின்றனவே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக