சனி, 8 பிப்ரவரி, 2020

உப்புக் கவிதைகள்

நடு நிசியின்கடலை நான் அறிவேன்
அலைகளுக்குள் உருவாகிக் கொண்டிருக்கும்
மலைக்குவடுகளில் மழை பெய்கிறது
நீர்மை நீரினுள் கலந்த பின் அமைதியற்றிருந்தது
எம்பி நிற்கும் பாறை களினுள் தேங்கி இருக்கிறேன்
நீ சரிவிலிருந்து வீழ்கிறாய்
நொதிக்கும் உன் பெருக்கினுள் நான் கையடிக்கிறேன்
நுரை தள்ளித் ததும்பும் கறையினில் அலை உன்னைப் போலில்லை
நடு நிசியின் கடலை நான் அறிவேன்
அது உன்னைப் போலவே தூங்கிக் கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக