வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளைகளில்
தேய்ந்து கொண்டிருந்தது
தன்னந்தனி நிலா
சலனமில்லா இரவின் தொடக்கத்தில்
அவர்கள் வந்தனர்
தங்களுக்குள் எந்த அறிமுகமுமின்றி
புணர்ந்து கொண்டனர்
தவிரவும் அவர்களுக்குள்
இடர்பாடற்ற உடல் இருந்தது
அவர்கள் விட்டுச் சென்ற நிலத்தில்
ஆவாகனம் செய்யப்பட்டது
பலிபீடம்
இடர்பாடற்ற மனித உடல்கள் 
அங்கு அமர்த்தப்பட்டன
சலனமில்லா இரவின் நுனியில்
அவர்கள் தூக்கிலடப்பட்ட பின்பு
ஒரு பகல் உருவாகியது
அதன் பின் வந்த 
எல்லா இரவுகளிலும்
கருப்பு வெள்ளைகளில்
தேய்ந்து கொண்டிருந்தது நிலா
நேற்றைய இரவைப் போலவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக