திங்கள், 8 ஜூன், 2020

ஆண் பால்

கோவில் பிரகாரங்களில் உள்ள சிலைகள் ஒவ்வொன்றையும் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறேன். எதிலும் மனம் ஒன்றவில்லை. நேற்று பார்த்த WWF உடல்களை திரும்ப மீள் உருவாக்கம் செய்து ஓட்டிக் கொண்டிருந்தேன். எதிரில் அனுமன் சிலை. புடைத்த வலுவான கை கால்கள். மிகப் பெரிய உடலில் கூப்பி நிற்கும் கைகளில் மெல்ல சாய்ந்து நிற்கும் கால்களில் வெண்ணெய் அப்பிய மார்புகளில் தோளின் குவைகளில். ஒரு பெரிய ஆண் குரங்கு. அதன் ஆண் தன்மையினாலேயே அழகாக இருந்தது. பல்லைக் காட்டி இளித்துக் கொண்டிருக்கும் அதன் பாவம். உலகில் வேறு எதை விடவும் அழகானது உடல் தான். அதுவும் ஆணுடல்.

கால்களுக்கடியில் குழையும் சேற்றுப் பரப்பு. அமிழ அமிழத் தான் அது உடல் என்று தெரிந்தது. உடைகளைக் களைந்து அம்மணமாய் நின்றேன். முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒவ்வொரு உறுப்புகளாய்ப் பார்க்கிறேன். மிக அருகில் அது ஏதோ மிருகம் போல விடைத்து தெரிந்தது. ஒவ்வொன்றையும் வருட கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. என் அறைச் சுவர்களில் பார்ப்பதற்கும் முகம் பார்க்கும் ஆடிகளையே சுவரின் எல்லா திசைகளிலும் பொருத்தி வைத்திருப்பேன். உடைகள் பெரிய அளவில் உறை போல. என்னைச் சுற்றிக் கொள்ளும் பொழுது நான் ஆடியில் பார்ப்பேன். முகம் மட்டுமே தெரியும். உடல் அற்ற தலை மட்டுமே கொண்டவன். 

கொஞ்சம் விரிந்து கொடுக்க எண்ணெய் தேய்த்து தடவிக் கொண்டேன். ஒரு சின்னஞ்சிறிய குமிழ் ஆர்டர் செய்து வந்திருந்தது. நல்ல வெள்ளி நிறத்தில். முதலில் விரல் விட்டு நன்றாக அழுத்தி உள்ளே விட்டேன். வலி பின்  மென்மையான காந்தல். ஆண் அமீபா போல  அல்லது மண் புழு போல. தனக்குள்ளேயே ஆண் பெண் ஆனவன். ஒரு விதத்தில் பாலற்ற பிறவி.

பால் தன்மை என்பது ஒரு பாவனை. உண்மையில் அப்படி ஒரு ஸ்தூல வடிவம் எதற்கும் இல்லை. வித விதமான புணர்ச்சிகளை இதற்குள் பார்க்கப் பழகி இருந்தேன். வாயிலோ குதத்திலோ திணியும் பொழுது குறி எனும் உறுப்பு தனித்த ஒரு உயிரி போல செயல்படுவதை பார்த்திருக்கிறேன். தன்னைத் தானே புணர்வது போல அது. ஏனெனில் குறி என்ற ஒன்றின் மூலமே நாம் பிரித்தாளப் படுகிறோம். புணர்ச்சியில் ஒரு உடல் எனும் தன்னை மறந்து ஒற்றையாக மாறுவது இவ்விரு வழிகளில் தான் என்று தோன்றியது. இன்னொன்று மலத் துவாரம் வழியே என் உடல் நுழையும் பொழுது ஒப்பனைகள் அற்றதாய் ஒரு பெண் என்பதையும் அவள் உடலையும் நான் மறுதலிக்கிறேன். அதற்கு வெறும் உடல் ஒன்றே போதும். பால் என்பதைக் கடந்த புணர்ச்சி.

இன்னொன்றிற்கு என்று நாம் நினைக்கும் பொழுதோ அதை அப்படியே நம்பும் பொழுதுதான் நாம் அளிக்கப்பட வேண்டியவர்கள். இதில் ஒரு சேர சுயநலமும் பெருமிதமும் ஏற்படும். நாம் அவர்களுக்கு என்பதில் உள்ள பொறுப்பின்மை. இன்னொன்று எடுத்தாளப் படுவதில் உள்ள அதிகார மாற்றம். அதை நமக்கும் அவர்களுக்குமாய் மாற்றி மாற்றி செய்து கொள்வது. நாம் இரட்டைத் தன்மையை விரும்புபவர்கள். அரணையைப் போல இங்கும் அங்கும் தாவிக் கொண்டே இருக்கும் பால் மாற்றம்.
ஆம். நீ ஆணாய் இருக்கும் பொழுது நான் பெண்ணாய் இருக்கிறேன் தலை கீழாகவும். மேலும் நீ ஆணாய் இருக்க நானும் ஆணாய். அதே போல பெண்ணாகவும். சில நேரங்களில
இரண்டுமற்றும் நாம் பிரவேசிக்கலாம். நாம் எண்ணிலடங்கா உடலம் கொண்டவர்கள். ஒன்றிற்குள் ஒன்று என நாம் பல்கிப் பெருகும் தோறும் ஒரு பகடை ஆட்டம். நொடிக்கு நொடி பால் தன்மையை மாற்றலாம் இழக்கலாம். உடலைப் பணயம் வைப்பதில் இருந்தே நாம் புணர்ச்சியைத் தொடங்குகிறோம். உண்மையில் இன்னொரு உடல் என்றே ஒன்று இல்லாதது போலத் தோன்றியது.

முதன் முதலில் உண்ணும் உணவு என்பது உடல் தான். உடலைத் தின்றே நாம் உயிர் வளர்த்தோம். அதனால் அது பால் பேதமற்றது. ஆனால் அதன் போதாமையும் அறியும் பொழுது தான் வெறி கொள்கிறது. அப்பொழுது உடலை அழிக்க வேண்டும். அதைக் கிழித்து உள் நுழைந்து வெளிவர வேண்டும். ஒரு தோட்டாவைப் போல நிணத்துடன் அது உடலில் பிதுங்கி இருக்கும் பொழுது ஒரு விடைத்த குறி போலத் தென்னி அழகாய் நிற்கும். 

அப்படித் தான் உடல்களுடன் என்னுடைய புணர்ச்சியும். நான் என்னை மிக அழகாக்கிக் கொள்கிறேன். ஒரு கட்டு மஸ்தான உடலை எனக்காக உருவாக்கிக் கொண்டேன். என் உதடுகள் எப்பொழுதும் சிவப்பாய் இருக்கத் தீட்டிக் கொண்டேன். என் உடைகள் என் மார்புகள் நன்றாகப் புடைத்து தெரியும் படி இறுக்கமாய் இருக்கும். நான் அழகன் என்று சொல்லிக் கொள்வேன். கண்ணாடியில் என்னுடைய பிம்பத்தினுள் இருந்து தோன்றுபவன் காமம் மட்டுமே ஆனவன். வேறு எந்த உணர்ச்சியும் அதன் மூலமே உருவாக்கத் தெரிந்தவன். 

தொடர்ந்து 22 நாட்கள். இவர்கள் என்னை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்னருகில் ஒவ்வொரு முறை வரும் பொழுதும் காறி உமிழ்கின்றனர். என்னை அசிங்கப் படுத்த தன் மிக அசிங்கமான குறியினைத் திணிக்கின்றனர். நான் அப்படியொன்றும் பெரிய தவறு செய்து விடவில்லை. எனக்கு பிடித்தமான குறிகளை அவர்களில் உடல்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டேன். இதில் என்ன பெரிதாய் நடந்து விட்டது. எனக்கு புரியவில்லை. நான் அக்குறிகளை பாடம் செய்து அதனை ஒரு கருவி போல ஆக்கிக் கொண்டேன். ஒரு நிஜக் கருவி. ஒரு நிஜக் குறியைக் கொண்டு உனக்கு பிடித்தது போல இயங்குவது. இது எத்தனை உயிர்களுக்கு வாய்க்கும். 

ஒரு சமயம் உடல் ஒரு ஊதிய பலூன் போல தோன்றும். ஆனால் நம் பிறப்புறுப்புக்கள் அப்படி அல்ல. அது தான் அப்பலூனிற்குள்ளிருக்கும் காற்று. ஊதப்பட்டும் உறிஞ்சப்பட்டும் வாழ்வது தானே வாழ்க்கையே. பிரபஞ்சமே ஊதியும் உறிஞ்சப்பட்டும் பல கோடி காத தூரம் நகர்ந்து கொண்டேதானே இருக்கிறது.

இதற்கு ஒரே வழி தான் நான் பிறப்புறுப்பு அற்றவன் ஆவது. அப்பொழுது என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் என்ற அகமும் அற்றவன். என்னை அடையாளப் படுத்த இவர்களுக்கு ஒன்றும் இருக்காது. ஆம் கடவுள் போல. அவன் அவள் அது அற்றுப் போதல். என்னைத் தண்டித்தல் என்பது என் பால் தன்மையை தலை கீழாக்க முயற்சிப்பதும் அதை கேலி செய்வதும் தவிர வேறொன்றும் இல்லை.

ஆண், ஆணிலி, பெண், பெண்ணிலி இவர்கள் அனைவருமாய் ஆகி இருப்பேன். இவர்கள் அனைவருமாய் நான் புணர்வேன். நான் என்ற ஒற்றை இருப்பை இல்லாமல் ஆக்குவேன். பின் இருப்பு என்பதே இல்லாமல் ஆகும். அதற்குத்தான் இப்படி வெவ்வேறு வகைமைகளில் ஆன உறுப்புகளை சேமிக்கிறேன். 

இது வரை 12000 உறுப்புகளை வைத்திருக்கிறேன். நான் என் உடல் முழுதும் அதைத் தைத்துக் கொண்டேன். பின் அம்மணமாய் என்னைப் பார்த்தேன். என் தலை தவிர்த்து உடலெங்கும் குறிகள். உடலே குறி. உடலே விடைத்திருந்தது. அனைத்தையும் அவர்கள் உச்சத்தில் இருக்கும் பொழுது வெட்டி எடுத்தது. விரைப்பைகளை நாசுக்காக அறுத்து அதன் களச்சிகளை பிதுக்கும் பொழுது அது உள்ளங்கையில் இருந்து நழுவி கீழே விழும். அதனை ஒவ்வொன்றாய் தனித் தனி கண்ணாடிக் குடுவைகளில் அடைத்து வைத்திருப்பேன். தனியறை மீன்கள் போல அவைகள் மிதக்கும். அளவுகளேற்றாற் போல குடுவைகளை வைத்திருந்தேன். அதனுள் சின்னக் கண்களுடன் தெளிந்த நீரில் அவைகள் மிதக்கும். தினமும் தவறாது அதற்கு இரையிடுவதும் பின் நீர் மாற்றுவதும் பிராணவாயுக் குத்தி குடுவைக்கு ஒன்றாக வைத்து பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். 

இது வாக்கு மூலம் அல்ல. ஒரு எளிய உயிராய் ஒரு அமீபா போல ஒரு மன் புழு போல வாழ விரும்பும் ஒரு ஆண்பால் உயிரியின் ஏதோ ஒரு பக்கத்தின் டைரிக் குறிப்பு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்வோம்.

23 நாட்கள் கழிந்த பிறகு நான் குறியற்றவனாய் இருந்தேன்
 ஆனாலும் ஆணாகத்தான் இருந்தேன். என்னை அவன் என்றே அடையாளப் படுத்தினர்.  குறி உடலில் குறிகள் அனைத்தும் வெட்டி எறியப்பட்டிருந்தது. காற்று போன பலூன் போல நான்  ஒரு ஆண்பால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக