ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கனவு

இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம் கேடபாரற்று கிடக்கிறது.
தினம் தினம் அவன் பலி பீடத்தில் பல வண்ணங்களில் கனவுகள் கழுத்து ஒடித்து அவியாக்கப்பட்டன.
என் சாம்பல் நிறக் கனவு மலத்துவாரம் வழியே வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நடு நிசியில்,
வெடி மருந்தினைப் போல படுக்கையைச் சுற்றிப் படர்ந்து கிடந்த சிவந்த கனவினையும்,
அக்குளுக்குள் இருந்து புழு போல நெளியும் பிங்க் வண்ணக் கனவினையும்,
யாருக்கும் தெரியாது என் பிறப்புறுப்புக்கிடையில் பதுங்கி இருந்த வெண்ணிறக் கனவினையும்,
ஒரு மடக்கில் பொதிந்து அவனிடம் சென்றேன்.
அவன் முன் பொதியிலிருந்து அவை சர்ப்பங்களாய் விரிந்தன.
அகன்ற வாய் திறந்து என்னை ஒட்டு மொத்தமாய் விழுங்கின.
இரு பிளந்த மலைகுன்றுகளுக்கிடையில்
 கனவுகளை வாழ்க்கையாக கொள்ள நினைத்தவனின்
சடலம்
தன்னந்தனியே
கேடபாரற்று கிடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக