வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

உப்பு

நான் ஒரு கட்டற்ற ஒன்றினை வைத்திருக்கிறேன்
அது உப்பாலானது
நேற்று அதனிடம் இப்படி சொன்னேன்
உன் குமிழிகளின் மூலமே என் உயிர் நிலைக்கிறது. நீ விடைத்தெழும் ஒவ்வொரு நொடியிலும் உன்னுடன் உப்பாகி விடுவது மட்டுமே நான் விரும்புவது. அது நீயாவதும் கூட. இந்த மிகப்பெரிய நீ உன் அலைகளைக் கொண்டு என்னை உடைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சாவதானமாக அங்கே அமர்ந்திருக்கிறாய். கடல் தன் பன்னிலடங்கா கரங்களால் என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறது. பாசி பீடித்த என் தோலினுள் அறைந்து அறைந்து நக்குகிறாய். நான் உப்பால் ஆனவன் உன்னைப் போலவே.

என்னை இன்னொரு முறையும் முத்தமிடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக