வெள்ளி, 5 அக்டோபர், 2018

இரவுகள்

இந்த ஒற்றைக் கையை துண்டாக்கி வைக்க முடியுமா,
அதன் சதைப்பற்றைக் கொண்டு ஒரு தலையணை செய்ய முடிந்தால்,
கூந்தல் இழைகளால் ஆன மேகங்களை காண்பேன்.
அந்தியைத் தாண்டிச் சென்று இரவினுள் விழுந்து கொண்டிருந்தது
நான் கனவில் பதுக்கி வைத்திருந்த விண்மீன் மழை.
சேற்றுக் குவியலாய் குழம்பும் என் மெத்தையின் அடியில் கனத்திருக்கும் வெக்கையின் சிறகுகள்,
உடலினுள் இறுக்கிக் கட்டிய சடம்பாய் இறுக்குகிறது.
நீ எனும் சொல்லிலிருந்து முளைக்கிறேன் உன் உடலினால் ஆன நீலப் பொதிகளாய்.
உத்திரம் அயர்ந்து விழும் வரைக் காத்திருக்கிறேன்.
கனக்க கனக்க உன்னை அணைத்துக் கொண்டிருக்கிறேன்
இரவு பட்ட மரம் போல வெகு அப்பால் வெறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக