திங்கள், 3 டிசம்பர், 2018

நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானம்

இன்னும் அலைந்து கொண்டிருக்கிறான் எங்கோடி கண்டன்.
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்த வானில் இருந்து அமைந்தது ஜோதி. கருப்பனிடம் உள்ள பிணக்கில் சிறிது போட்டிருந்தான் போல.
குழலை எடுத்து தாகம் தீர ஊதத் தொடங்கினான்.
கருத்த வனம் அவனை மத்தகத்தில் இருத்தியது.
மெல்ல ஊன் பலியின் ரத்த வெள்ளம் சுனையெடுத்து கொதிந்தது
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்ட வானம் மழையை இரையெடுத்து நெளிந்தது.
ஊன் ஊன் ஊன்.
கால்களினடியில் நொதித்துக் கொண்டிருந்த கள்ளின் ஊற்றிலிருந்து முளைத்தெழுந்தான் கருப்பன்.
இருவரின் கோப்பைகளுக்கு நடுவில் வந்தமர்ந்தது  ஏதுமற்ற கருத்த வானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக