ஞாயிறு, 27 ஜனவரி, 2019

மொழி

வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று வனாந்தரங்களில் தனித்து உலவிக் கொண்டிருந்தது.
தூரத்து மலைகளின் துணுக்குகளில்,
அணைந்தெரியும் கங்குப் பொதிகளில் தேங்கியிருந்தது
நாள் பட்ட பழைய மொழி.
சொல்லற்ற பிரதேசத்துப் புதை குழிகளில் இருந்து
தோண்டி எடுக்கப்பட்ட பிணக் குவியல்களில் அழுகிக் கொண்டிருந்தன கதைகள்.
அன்று முழுமையாக படர்ந்த இருள் வெளியிலிருந்து பிதுங்கி வெளி வந்தன ஒளிப் புழுக்கள்.
மெல்ல மெல்ல பற்றிக் கொண்டு எழுந்தது வானம்.
வார்த்தைகளாலும் கவிதைகளாலும் ஆன ஒன்று சொல்லிலிருந்தும் மொழியிலிருந்தும் திருகல் ஆணி போல கழன்று விழத் தொடங்கியது.
அது பெரும் மழைக் காட்டில் தன்னுடன் தான் மட்டுமே தனித்திருந்தது...
கதைகள் ஊறத் தொடங்கியதும் மிச்ச பிணங்கள் ஏரிந்தன கூட்டாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக