வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

நெடி

அவள் வியர்வையை உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருக்கிறேன்.
அது கவிதைக்கே உண்டான கனவுகளை தோசைக் கல்லில் மாறி மாறி திரும்பிக் கொண்டிருந்தது.
மெல்ல கதவடைத்து விட்டு கனவுகளின் தாக்கோலைக் கொண்டு அதனை நறுக்கினேன்.
அறையெங்கும் வியாபிக்கும் நறுமணம்,
பலூன் பழங்களாக மிதந்தது.
கடைசியாக பசியுடன் அருந்திக் கொண்டிருந்த மதுக் கோப்பையில்,
சொட்டிக் கொண்டிருந்தன மழைத்துளிகள்.
தேங்கல் நதியின் பாசிப் படலங்களின் பிசுபிசுப்புடன் இருந்தது உள்ளங்கை.
அரவமின்றி உள் நுழைந்தது கதகதப்பு.
கனவுகள் தோசை மணத்துடன் பற்றி எரிய
உள்ளங்கைகைகளைக் கொண்டு நாசி அடைத்துக் கொள்கிறேன்.
வெளியெங்கும் உன் நெடியுடன் நனைத்துக் கொண்டிருக்கிறது மழை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக