செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

வான் நிலா நிலா அல்ல

என் கைகளுக்குள் மெல்லப் பதுங்கித் திமிறுகிறது,
ஒரு வெண் பறவை.
அதன் கதகதப்பானஅடிப்பாகத்தில்
எழுதியிராத மொழியின் சீழ்க்கை.
என் ரேகைகளின் அடிவாரத்தில் ஊறிச் சுரக்கிறதே
இது என்ன?
ஒரே நேரம் ராட்சசமும், தேவமும்
என் விரல்கள் வழி ஊடி அழுந்தித் தெறிப்பதேன்.
சிறகுகள் மெல்ல மெல்லப் பிரிய முனையும்.
துடிதுடிப்பினில் ஒரு சமயம் இழுத்துப் பற்றினேன்,
பின் விடுவித்து தளர்ந்தேன்.
நளினத்துடன் என் உள்ளங்கைகளில்
அது உந்துகிறது.
வட்டம் வட்டமாய் சுழல்கிறது.
வானம் வந்து ஏந்திக் கொண்டதும்
எல்லாம் தலைகிழாகியிருந்தது.
இப்பொழுது
இந்த தாமரைக் குளம்
பூமியைச் சேர்ந்ததல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக