செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கன்னியாகுமரி

இந்த எரிச்சுனையின் கரையில்
கால நேரமின்றி
மழுங்கிக் கிடக்கிறது நான்.
உன் பாசி பூத்த படித்துறையில்
தேகம் தழுவிக் கரையாமல்
மீதமிருக்கும்
அழுக்கு நுரைகள்.
அந்தியின் கழுத்திறுக்கிய
தாம்புத் தடத்தில்
நீ வருடிச் சென்ற ரேகைகள்.
என் உச்சந்தலையில் நீ பதித்த கால்தடம்.
உன் பாவாடைத் தும்பை
நான் அதக்கிய
உமிழ் நீர் மழையுடன்
இருக்கிறது நீ.
சுற்றிலும் வற்றிய பாழ் குளத்து நடு மண்டபம்
என் தனிமை.
தெப்பத் திருவிழாவில்,
உன் பாதத்திற்கடியில் ஊறி நிரம்புகிறது நான்.
கால நேரமற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக