புதன், 21 ஏப்ரல், 2021

ரமலான் கரீம்

 பசியை ஒறுத்தல் அல்லது உணர்தல் 


நிச்சயமாக இறைவனின் உருவம் பசியாகத் தான் இருக்க வேண்டும்.  இந்த மாதம் அதற்காகத் தருவிக்கப்பட்டது. இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம். ஒரு முழு நாளும் பசி பசி என்று அதை மட்டுமே நினைத்திருத்தல். தனித்தும் விழித்தும் அதனை மட்டுமே ஸ்தூலமாக அறிதல். உடல் அதன் ஒவ்வொரு செல்லிலும் இடைவிடாது துடித்துக் கொண்டிருக்கும் ஆதி விளைவை மிக நுண்மையாக உணர முயல்வது. அது இறைவனை அறிதலைத் தவிர வேறென்ன. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வை வலியை சாசுவதமாகவும் அமைதியாகவும் உணர்தல். தன் தனிமையில் தான் மட்டுமே தன்னுடைய எல்லாம் என்றும் உடலை இன்னும் அணுக்கமாக அறிந்திருத்தல். மற்றும் தான் என்பது அனைத்தும் என்பதை அறிவது. காலம் என்பது பசியாக உருமாறி எதிரே அமர்ந்திருக்கும். இறை என்பதும் அதுதானே. 


பசி எனும் சொல்லின் விளைவை ஒரு தூய  மிருகம் போல உணர்ந்து கொள்ளும் பொழுதே அதனை சிறுகச்சிறுக உடலின் ஒரு உறுப்பு போல இக்காலத்தில் அமைத்துக் கொள்வோம். அதன் வலியை அறிவோம். ஒவ்வொரு முறை உண்ணும் பொழுதும் நன்றி சொல்வோம். பிரார்த்திப்போம். 


பசியே இறைவன். அவனை பாசாங்கின்றி வணங்குவோம். 


ரமலான் கரீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக