திங்கள், 16 ஏப்ரல், 2018

தாகத்தின் நீர்

தாகத்தின் நீர் அலைகிறது
இண்டு இடுக்குகளில்
பதுங்கிக் கிடக்கின்றன நாக்குகள்
சத்தமின்றி வந்திறங்கும்
ஓராயிரம் சிறகுகள்
வானம் வானம் வானம்
பாதங்களுக்கடியில் சொத சொதக்கிறது
எச்சில் ஊற்று
விழுங்க இயலாத
நீர்மையின் கண்ணிகளில் இழுபடுகிறது
மீன் பற்றிய கனவுகள்
கனவுகளின் நிறங்களில் பாய்கிறது
மழை
நீ எனும் சொல்பட்ட நிலமெங்கும் ஊற்று
உன் நீள் முத்தத்திற்கு பின்னாலும்
நின்று விடாத
அலைச்சலின் வெம்மை
தாகத்தின் கொக்கிகளில்
ஏராளம் தொண்டைகள்
உன் நிழல் பாயும் சிற்றோடையில் கவிகிறது
கரும் மேகம்
நாக்குகளில் பேருரசல்
நீர்மைக்குள் புரள்கின்றன கண்ணாடிச்சில்லுகள்
தனிமையுடன் அமர்ந்திருக்கிறது வலி
தாகத்தின் நீர்
வழியெங்கும் சிதறித் துளிர்க்கிறது
பேரிரைச்சலுடன் வான் விடுகின்றன
ஓராயிரம் சிறகுகள்
பூமி பூமி பூமி
கனவுகளின் நிறத்தில் உறைந்தது வெயில்
தனிமை வற்றிய தாகக் கடல்
மீதம் கிடக்கும்
ஈரம் உலரா சிப்பி வாய்களில்
உன் உலரா முத்தம்.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கன்னியாகுமரி


உள்ளும் புறமுமாய்
நான்
உருவாக்கிக் கொண்டேன்
எனக்கான தொலைதூர மணல் வெளியை
காலங்களுக்கப்பால் கிடக்கும்
திட்டுக்களின் ரேகைகளிலிருந்து
வாழ்நாட்களின்
உலர்ந்த வேர்முடிச்சுகளை
மெல்ல அவிழ்த்து வெளியெடுக்கும் பொழுது
இன்னும் சொட்டியது 
எஞ்சியிருந்தது
தவிப்புடன் அதன் தண்டுகளை உடைக்கிறேன்
உள்ளிருக்கும் கிழங்குகளின் 
சொதசொதப்பை சுரண்டுகிறேன்
சின்னஞ்சிறு சிற்றோடையாய்
என் பாதங்கள் வருடி நின்றிருக்கிறது
எலுமிச்சை நிற ஒளி
தனித்திருக்கும் முட்செடிகளின் வழி
வழிந்தோடுகிறது கானல் நதி
அலைக்க அலைக்க
விடாமல் வலை வீசினேன்
மீன்களின் கண்களுடன்
கொத்துக் கொத்தாய்
பெண்ணுடல்கள் துடிக்கத் துடிக்க,
மூச்சடங்கிய பின்
மெல்ல ஒவ்வொருவராய்ப் புணரத் தொடங்குகிறேன்
நேற்றையக் கனவின்
ஆணுடல்களின் குறிகளை
வெறி தீரக் கடித்துக் குதறியிருப்பேன்
அதற்கு முந்தைய நாட்களின்
எண்ணற்ற உடல்கள்...
பாலினம் தொலைத்த
முடிவில்லா உடலப்பெருக்குடன்
நானும் ஒளிந்து கொண்டிருப்பேன்
என் உடலின் பாலினப்பாகங்களில்
செயற்கைத் துடிப்புகள் கை கூடியிருந்தது
அகலக் கால் விரித்து குப்புறப்படுக்கிறேன்
அலை
அலைகள்
அலைகளின் பாய்ச்சலில்
படித்துறையில்
கால்கள் புதையப் புதைய
அடிமண்டிய சேற்று வண்டலிலிருந்து
வெளிவரத் தொடங்கியது
இதுவரை நான் உதிர்த்துக் கொண்டிருந்த
விந்து ஊற்று
உள்ளும் புறமுமாய்
உருவாக்கிய நெடும் மணல்
பாலாழியாகிறது
கசிந்து பீய்ச்சுகிறது
அமிர்தமும் விடமும்.
நீலகண்டன் உடைந்தழுது மாய்கிறான்
மாயவனை உயிரோடு (இருந்ததா) விழுங்கியது சேஷம்
நான்கு தலைகளும் நான் திசை தெறித்தது
தேவனும் அசுரனும்
தொடர்ச்சியற்று அகழ்ந்தெடுத்தனர்
அடியின் பெரும் பாறை  உடைவிலிருந்து கிளர்ந்தெழுந்து
எட்டுத்திக்கும்
சூழ்ந்தது நீர்
எங்கும் நீர்மை
அந்த உப்பு வெளியின் நடுத் தீவில்
முக்காலத்திற்குமாய் பெய்து அடங்கியது மழை
செழித்த தீவிலிருந்து
வெளியேறும் முன்
என் பிறப்புறுப்புகளை சரிபார்த்துக் கொள்ளும் பொழுது
அவள் வந்தாள்
நீ ஆண் என்றாள்
ஒற்றைக்காலுடன் என்னைப் புணர்ந்து மறைந்தாள்.











ஒளி

ஆதிக்கலவியில் உருத்திரண்ட வினைப்பயன்
பிறிதொன்றிலாது ஊடுருவிக்கொள்ளும்
உன்மத்தச்சூடு
நிழல்களினுள் தன்னிருப்பை ஸ்திரப்படுத்தியது
நெகிழ நெகிழ வடிவு துலங்குவது
நேர்க்கோடுகளிலிருந்து புள்ளிகளை கருவுற்றது
நீ
நான்
அவள்
ஸ்தூலம்
அரூபம்
சேர்தல்
பிரிதல்
மண்
வான்
காலம்
முடிவிலி
தேவம்
சர்வம்
ஓம்! ஓம்! ஓம்!

கடைசிமுகம்



எத்தனை முகங்கள், உடல்கள். அதில் முலைகளும், அல்குல்களும். என் வாழ்தலின் கணங்கள் இந்த உடல்களால் நாசி நிரப்புகையில், அகம் மூட்டைப்பூச்சியாய் உள்ளுள் நகர்கிறது. அதன் கூர்மையான உறிஞ்சுக்குழாய் எப்பொழுதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இரை! இரை! என்று. காமம் ஒரு கவிழ்த்துப் போட்ட கரப்பானைப் போல கால்கள் நடுங்க உணர்கொம்புகள் உராயத் துடித்துக் கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளில் என் முதுகுச் செதில்கள் கொழுத்தியிட்டிருக்கிறது. அதன் ஒவ்வோர் அழுத்தத்திலும் தன்னுணர்வின்றி என்னுள் ஒரு ஆதி மிருகம் மிக வன்மமாய் பதுங்கிக் கொண்டு நோட்டமிடுகிறது. சிறுதுளி தாமதமுமில்லை, அதை எதிரில் இருக்கும் எந்த உடலும் எளிதில் புரிந்து கொள்ளும். அவர்களின் அகம் அதை உணரும் நொடியில் பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன். நான் மனிதன் என்று சொல்லிக் கொள்கிறேன். மனிதனாய் இருப்பது என்பது வெறும் பாவனைகளால் வாழ்வதுதானே. குறுக்கு வெட்டாய் என்னை ஆராய்கையிலெல்லாம் இந்த மிருகத்தின் சமிக்ஞ்களை அணுக்கமாய் அறிந்திருக்கிறேன். வெகு நாள் நான் காத்திருக்கப்போவதில்லை, என்பதைப்போல அதன் சிவந்த உள் நாக்கு காட்டி, வீரப்பல் மிளிர இளித்துக் கொண்டிருக்கிறது.
பின் சுயமைதுனத்திற்காக, உடலங்களின் நுண்ணிய பரப்புகளை மீட்டுக் கொள்கிறேன். சிறுவயதில் நான் எப்பொழுது அல்குலை அறிந்தேன். முதல் முறை நான் அதை அறிகையில் அங்கு நான் ஒரு ஆண் குறியை எதிர்பார்த்தேன். அங்கு எதுவுமில்லாதிருந்தது. ஆனால் அது என்னுள் நான் உள் நுழைந்து கொள்ள வேண்டிய, நான் உயிர் வாழ்வதற்கான உறுப்பாய் உருமாறிக் கொண்டேயிருக்கிறது இத்தனை நாட்களாய். எங்கும் நான் தொலைந்து போகும் ஒரு இடம் எனில் அதனுள் மட்டுமே. அது அவ்வளவு சுலபமுமல்ல. நான் என் அம்மையை அங்கு உணர்கிறேன். அந்த மெல்லியத் துளை வழி நான் அவளது உடலுடன் நெருக்கமாய்ப் பிணைந்து ஒட்டியிருக்கிறேன். பிரிக்கவே வழியில்லாதபடி. அங்கு முடிவில்லாத் தூரம் அவளை நான் விரும்புகிறேன்.  வெறுக்கிறேன்.
என் கனவுகளுக்குத் தெரிந்திருக்கிறது. நான் தேடும் முகங்களை. அந்த முகங்களில் என் விந்துவைப் பீய்ச்சி பீய்ச்சி பழிக்கிறேன். நீயல்ல! நீயல்ல என்று. முடிந்தவுடன் தன்னிரக்கம் மேலிட நொய்ந்த குறியையும், விரையையும் அழுத்திப்பற்றிக் கதறுகிறேன். உண்மையில் உங்களுக்கு என்னதான் வேண்டும். எவ்வளவு வடித்தாலும் நிரம்பாப் பிலங்களை நான் அதன் பிறகான கனவுகளில் கண்டு விதிர்த்துக் கொண்டிருந்தேன். சின்ன முக அசைவுகளில், சிணுங்கல்களில், உடல் நெளிவுகளில் நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். ஆம்! ஆம்! இது காமம். அவளது அழைப்பு இது என்று. என்னுள் எம்பக் காத்திருக்கிறான். இந்த முகம். இல்லை அந்த முகம். முகங்கள் தன்னுள் தான் அமிழ்ந்து முடிவிலியில் பிரதிபலித்து, முகங்கள் மட்டுமேயான விராட உருவமெடுக்கிறது. அங்கு பெண்ணுடல்கள் நொதித்துக் கொண்டே இருக்கும் குழியில் நான் தனித்து விடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
என்னுள் கேள்விகள் எழுப்புகிறேன். இது என்ன வகையானத் தன்மை என்பதை பிரித்தறியவே முடியவில்லை. இது ஒரு ஈடிபஸ் காம்ப்ளக்சா? உன் சகோதரிகளை நீ எங்கனம் உணர்கிறாய்? அப்படி சகோதரிகள் இருந்திருந்தால் உனது காமம் அவர்களை நோக்காமல் விட்டு விடுமா? உண்மையில் இதனுள் செல்லச் செல்ல குறியை அறுத்து விடலாமா? என்று விடலைத்தனமான எண்ணம் தோன்றாமலில்லை. ஒரு ஆண் பெண்ணுடலைப் புரிந்து கொள்ளுதல் என்பது சாத்தியமில்லாத தூரத்தில் கோடிடப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டிய எதிரொலிகள் மட்டுமே இறைந்து கிடக்கும் அகாலப் பெருவெளியாய், விடாமல் என் கருஞ்சுவர்களில் பட்டுத் தெறித்துக் கொண்டே இருக்கிறது.
தெருவில் நாய்கள் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், சே! எத்தனை எளிதான விசயம். காற்று நிரம்பிய பலூனைப் போலவோ, இல்லை கனத்த ஈயக் குண்டைப் போலவோ அகம் மாறி மாறி ஒளிந்தும், வெளிப்பட்டும் போக்கு காட்டுகிறது. அது ஒரு ஊளையாக மாறிடும் போது, அந்த மெல்லியத் துளைகளை இடைவிடாது முட்டி மோதிக் கொண்டே இருக்கிறேன். அவர்களது முகங்கள் என்னை அலைக்கழிக்க அங்கு காத்துக் கொண்டிருக்கிறது. சபலங்களின் ஒவ்வொரு படிகளிலும் நான் தேடும் முகம் ஒன்றேதான் என்பது சில நேரங்களில், குளத்தின் நீரலைகளில், தலைதூக்கி முழுகும் நீர்க்காகத்தைப் போல மின்னி மறைந்து விடுகிறது. பின் நான் முகங்களுக்காக அலையவில்லையோ, எனக்குத் தேவையானது வெறும் உடல்தானோ என்று, ஆபாசப்படங்களுள் கட்டின்றி புணர்ந்து கொண்டே இருக்கிறேன்.
இந்தக் கற்பனையின் துர் கனவுகளில், அவையெல்லாம் என் எண்ணங்களின் கரைந்து கொண்டிருக்கும் பகல் கனவுகள் தான் என்பதை நான் என்று அறியப் போகிறேன். சபலங்கள் திரைப்படிந்த கண்களின் வழி பெண்களை அணுகுகையில், அதே போல ஒரு திரைதான் எதிராளியிடமும் இருக்கும் போல என்று எல்லவற்றையும் எளிதாக்கிக் கொள்ள பிரயத்தனப்படுகிறேன். உண்மையில் இந்த மூடுதிரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை பெண்களை ஒரு ஆண் தன் பகற்கனவுகளில் வடித்துக் கொண்டேயிருக்கிறான். விடையே இல்லாத புதிர்க்கணக்கு.
எத்தனை முகங்களைக் கண்டாலும் இன்னும் ஒன்று என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறேன். அது என்னுடையதாக இருக்கும் என்று நம்பிக்கையில். அங்கு நான் முகங்களைக் கண்டறியப் போவதில்லை. ஏன்? என்னால் எதையுமே தேர்ந்தெடுக்க முடியாது. மெல்லியத் துளை வழி நான் கண்டறியப் போகும் ஒரு முகம் என்னை உள்ளீடற்றதாய் மாற்றும் தருணம், நான் எதிர்பாரா அந்தக் கணம். அவள் தன் ராட்சச உகிர்களால் என்னை முழுதும் கிழித்துக் குடிக்கையில், நான் அறிந்திருக்கக் கூடுமா? இல்லை இன்னும் முடிவிலி முகங்கள் எனக்காகக் காத்திருக்கின்றனவா?

இன்னும் அவள்


ஒவ்வொரு அலைச்சுவடிலும்
பாதம் தொட்டு
இறைஞ்சும் உப்பு வியர்வை
பெயரற்ற அதன் ஈர நுனிகளை
கடைவாயில் அதக்குகிறேன்
சுவையின் ஊற்றுக்கண்ணிலிருந்து
உயிர்த்தெழுகிறது
மழை
என் நிழல்கள் மண்டிய வாசலில்
நிர்வாணத் தொடுகையுடன்
வந்தமர்கிறாள்.
நிறமற்ற மழைக் கூச்சல்
மேலடுக்குகளின் பொருக்குகள்
செம்மண் நீரோடையாய்
உருண்டோடுகிறது
உள்ளடுக்குகளின் குழைந்த சதுப்பில்
பல்லாயிரம் ஆண்டுகளாய்
கரைதட்டிக் கிடக்கும் தோணி
இன்னும் மழை
இன்னும் அவள்…