புதன், 6 மே, 2020

கனவு

கனவு மொழியாவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வெவ்வேறு தளங்களுக்குள்புகுந்து வெளிவருதல். கால இடமற்ற வெளி ஒன்று ஸ்தூலமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் ஆவதும். காலம் என்ற அளவை உடலால் பிளவுறுதல். உடல் வலி மட்டுமே ஆனதாய் அந்த வலியினால் உருவாகும் மொழி கொண்டதாய் ஆகி விடுதல். 

மரணம் நித்தியத்துவத்துடன் அலையாடியது. மரணம் பற்றி நான் இவ்வாறு நினைத்துக் கொண்டேன்.

"கடல் அலையினில் அலைக்கழியும் மதுக்குப்பி போல"

துரத்திக் கொண்டிருக்கும் ஒன்று திடுமென்று நின்றது. அருகில் அன்போடு அழைத்தது. அதன் சொற்கள் அழைத்துச் சென்ற தூரம் ஒளி கொண்டிருந்தது. ஒளி என்பது நிலையற்றதாய் இருந்தது. சிறிது துளிர் போதும். இருள் வந்து அணைந்து கொள்ளும். பின் இருள் மட்டுமே ஆனது.  இருள் தன் பிரத்யேகமான காட்சியினை ஒளிர்த்தது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக