புதன், 6 மே, 2020

பறத்தல் அல்லது பாடுதல்

நீ என்னைப் பாட அழைத்தாய்
குழந்தை அன்னை அறியாது மறைத்து வைத்திருக்கும் 
மிட்டாய்த் துணுக்கினைப் போல என் பாடல்களை வைத்திருந்தேன்
சங்கடங்களும் திருப்தியின்மையும்
ஒரு கூன் போல என் குறுக்கில் பொதியப் பட்டிருப்பதைப் பார்த்தாய்
எனக்கு நீலச்சிறகுகளை அளித்தாய்
நான் அறிவேன்
நான் அழிவற்றதைப் பாடுபவன்
உன் விரல் சுட்டிய திசையினில்
நான் பறக்கிறேன்
எல்லையற்று விரிந்த இந்த நீர்மையின் உப்பினைப் பருகுவேன்
நீ பறத்தல்
நான் என் சிறகுகள்

- தாகூர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக