செவ்வாய், 12 மே, 2020

குருதிப் பூ - குறுந்தொகை

செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

மலைத் தொடர்களுக்கிடையே செம்மையின் துளி. உருகி உருகி கருமை முழுதும் வழிந்து பெருகியது. பெரிய கரும்பாறையின் முதுகிலிருந்து மத்தகம் வழியே ஒழுகிய திரவம் எப்பொழுது தீயாகியது. வான் நோக்கி தழலும் செந்தழல். தீ மலராகி எரிந்தது. அணையா எரி. தீயின் மகரந்தங்கள்  மலை முகடுகளிலும் பாறை இடுக்குகளிலும் பொருக்கு போல படிந்திருந்தது. தோண்டத் தோண்டக் குருதி. செங்குருதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக