புதன், 6 மே, 2020

இசை

இரு வானங்களுக்கிடையில் என்ன உண்டு 
மௌனம் என்றாய்
என் இசைக் கருவிகள் துருப்பிடித்திருந்தன
நீ வெறுமனே என் முன்னே அமர்ந்திருக்கிறாய்
உன் இருப்பில் 
நான் அமைதியற்றிருந்தேன்
இறுதியில் நீ அதனை செய்தாய்
சுக்கு நூறாகும் படி அனைத்தையும்
உடைத்தெறிந்தாய்
இரு மண் துகள்களுக்கிடையில் என்ன உண்டு
ஒரு வானம் என்றாய்
பின் ஒரு மௌனம் என்றாய்

- தாகூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக