செவ்வாய், 12 மே, 2020

மாசறு கழீஇய யானை - குறுந்தொகை

இந்த பெருமழைக் காலத்தில் மலைகளைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறேன். இம்மலைகள் இதன் நிலைத்த தன்மை. மேகங்களுக்கிடையில் தியானித்திருக்கிறேன். நான் நான் என்று அறைகிறது மழை. மழை அனைத்தையும் தருவித்துக் கொண்டிருந்த இரவில் மலைகள் என்ற தனி நிலம் காணாமல் ஆகியது. நீரினுள் அமிழ்வதும் உன்னில் ஆழ்வதும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இருமை அவிழ்ந்த நிலை. உண்மையில் அவிழ அவிழ நீ துலங்கி வருகிறாய். மாசற்ற நிலம் உன் உடல். நீல வெளியின் கருமையிலிருந்து முகிழ்த்த நீர்மை உன் தேகத்தின் ஈரம். ஆனால்  இரவில் தனித்துப் பொழியும்  ஆழிமழையின் கண்களில் உப்பின் சுவை. உன் சுவை.

அது அடைய இயலாது தனித்துப் பொழிந்தது. அதனாலேயே அளவற்றிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக