புதன், 6 மே, 2020

ஏதோ ஒன்று

மீட்ட இயலாத இசைக் கருவியை வைத்திருக்கிறேன்
என் பாடல்கள் பாடப்படவே இல்லை
இரவின் கமகங்கள் 
ஒரு தூறல் மழை போல அலைக்கழிகிறது
பகலின் மேகமற்ற வானம் 
கால்களற்ற ஊர்வன போல
நகர்கிறது
அவள் முகமோ குரலோ வாசமோ ஏதும் இன்று இல்லை
ஒரு கதைப்பாடல் போல அவள் என்றோ உருமாறியிருந்தாள்
ஒரு வேண்டாத உறுப்பு போல இந்த இசைக் கருவியை வைத்திருக்கிறேன்
அதன் நரம்புகளில் இருந்து ஒரு பழைய பாடல் 
பழுத்த இலை போல உதிர்கிறது
சருகுகளின் அடிப் பொழுதுகளில்
உறங்குகிறேன்
அவள் முகமோ குரலோ வாசமோ ஏதோ ஒன்று


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக