புதன், 6 மே, 2020

வேணு

நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்
இவ்வுடைந்த வெற்றுப் பாத்திரத்தில் 
மீள மீள நிரம்பிக் கொண்டிருக்கிறது
உன் மழை
சின்னஞ்சிறிய என் துளைகளின் வழி முகிழ்க்கிறது உன் மூச்சின் பாடல் 
நீ! உன் ஸ்பரிசம் தொட்டு மீண்டதும்
அழிவற்றதாகிறது
என் உலகம்
என் கைகளுக்குள் அடைபடாத ஒன்றை எப்பொழுதும் பரிசளிக்கிறாய்
இன்னும் இன்னும் என்னுள் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப நான் நெகிழ்ந்து
கொண்டே இருக்கிறேன்
நீ என்னை முடிவற்றவனாய் ஆக்கினாய்!

தாகூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக