வியாழன், 11 ஜனவரி, 2018

வாகனங்கள்

கூண்டுகள்
நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தனித்தனியானவைகளாய்.
எந்தத் தகவல் பரிமாற்றாங்களுமின்றி
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில்
இருப்பின் சகிதம்
பெரிதாகவும்
சிறிதாகவும்
மிகச்சிறிதாகவும்.
கண்களின்றி பார்வை உணரும்
சிலக் கூண்டுகளை
பிரத்யேகமாய் ஒதுக்கி
கண்டந்துண்டமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
அதன் உறுப்புகள்
அதுவரை ஏங்கிக் கிடந்த
காற்றில்லாத, நகர்வில்லாத,
நிலைத்தன்மையினால்
அவிழ்ந்து கிடக்கின்றன.
எந்த பயனுமில்லாத கடந்தகாலம்
உண்மையில்
ஓரு காலமற்ற வெளிதானே!
நாம் இஷ்டம் போல புனைந்து தள்ள.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக