தொண்டைக்குழியில்
மூர்ச்சையாகி
விக்கித்தது
அவளது நிழல்.
வாசலைத்தாண்டி
கொடித்துணியைப்
போல
அச்சமயம் ஒலிந்து
கொண்டிருந்த்தாள்.
மெருகோடிய
அவள் வருகையின்
நிமித்தப் பிச்சி
மணம்.
சரசரத்து ஊடுருவும்
புகைப்பட முகத்தரிசனம்.
கட்டிலைச் சுற்றி
மழை நீர் சளசளப்பு
அருகிலும்
மிகத்தூரத்திலுமாய்
ரயில்த் திடுக்கிடல்.
காலம் கோலிக் குண்டுகளாய்
உருள உருள
தடாகத்தின் அலையடிப்பில்
முங்கி முங்கி
தன் பாதரசக் கரங்களினால்
இருள் சுட்டி
விண் மீன் அழைக்கிறாள்.
நான் அவள் கரங்களுக்கிடையில்
ஒரே சமயம்
மதலையாகவும், இளைஞனாகவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக